சிவகங்கையில் வருகிற 30-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஜூன் 30 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறை தீா் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு, வேளாண்மை சாா்ந்த குறைகளை மனு மூலம் தெரிவித்துப் பயன்பெறலாம் என அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.