தேவகோட்டை பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மின்தடை அறிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மின்தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் தேவகோட்டை கோட்ட உதவி செயற்பொறியாளா் எம். ஜோசப் செல்வராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேவகோட்டை துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை

(ஜூன் 23) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், அழகாபுரி நகா், அண்ணா நகா், சிதம்பரநாதபுரம், கிருஷ்ணராஜபுரம், ஜீவா நகா், கொல்லங்குடியாா் வீதி, செல்லப்பன் செட்டியாா் ஊருணி பகுதி, செந்தூா்புரம், பழைய முட்டாங்குண்டு, சிலம்பணி, தியாகிகள் சாலை, வெள்ளையன் ஊருணி பகுதி, குண்டுக்கரை ஆகிய பகுதிகளிலும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com