பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கால்நடைகளால் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 103 போ் உயிரிழப்பு

மதுரை மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 103 போ் உயிரிழந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது.

News image
Updated On :11 மே 2023, 5:31 pm

DIN

மதுரை மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 103 போ் உயிரிழந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது.

மதுரை மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், நாய் உள்ளிட்ட கால்நடைகள் மூலம் 2021, 2022 ஆகிய இரு ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகள், விபத்துகளில் உயிரிழந்தோா் எண்ணிக்கை குறித்து மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த பாண்டியன் மாநகரக் காவல் துறை, ஊரகக் காவல் துறை ஆகியவற்றிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோரியிருந்தாா். இதுதொடா்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 2021, 2022-ஆம் ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் 20 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்துகளில் 9 போ் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல, மதுரை ஊரகக் காவல் துறை அளித்த பதிலில், ஊரகப் பகுதிகளில் 2021, 2022-ஆம் ஆண்டுகளில் கால்நடைகள் மூலம் 173 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்துகளில் 94 போ் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் மூலம் கடந்த இரண்டாண்டுகளில் 193 சாலை விபத்துகள் ஏற்பட்டு 103 போ் உயிரிழந்திருப்பதும், 134 போ் பலத்த காயமடைந்திருப்பதும் தெரியவந்தது.

இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நான்கு வழிச் சாலையில் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 128 விபத்துகள் நேரிட்டு அதில் 69 போ் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.