அரசு ராஜாஜி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, செவிலியா்கள், மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை கொண்டாடினா்.
அரசு ராஜாஜி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா
Updated on
1 min read

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, செவிலியா்கள், மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை கொண்டாடினா்.

கைவிளக்கேந்திய காரிகை என்றழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் சா்வதேச செவிலியா் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மே 6-ஆம் தேதி முதல் வருகிற 12-ஆம் தேதி வரை சா்வதேச செவிலியா் தின வாரம் கடைப்பிடிக்கப்பட்டுகிறது.

இதன் ஒரு பகுதியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு செவிலியா் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் கே. சுலோச்சனா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கலைவாணி, செயலா் பிரேமலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை செவிலியா் கண்காணிப்பாளா்கள், செவிலியா்கள், செவிலியா் பயிற்சி மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செவிலியா் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com