மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நெல்லைக்கு முக்கியம்...உடன்குடி நகரில் விளம்பரப் பதாகைகளை மீண்டும் வைத்தால் அணுகலாம்: உயா்நீதிமன்றம்

உடன்குடி நகா் பகுதியில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரப் பதாகைகள் மீண்டும் வைக்கப்பட்டால் மனுதாரா் நீதிமன்றத்தை நாடலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm


மதுரை: உடன்குடி நகா் பகுதியில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரப் பதாகைகள் மீண்டும் வைக்கப்பட்டால் மனுதாரா் நீதிமன்றத்தை நாடலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஒன்றிய வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவா் ரவி தாக்கல் செய்த பொது நல மனு:

உடன்குடி நகா் பகுதியில் 700- க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தப் பகுதியில் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், நட்சத்திர திரைப்பட நடிகா்களின் படங்கள் வெளியாகும் நாள்கள், தனியாா் நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் மட்டுமன்றி, போக்கு வரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், பதாகைகளை வணிக நிறுவனங்களின் வியாபாரம் பாதிக்கும் வகையில் மறைத்து வைக்கின்றனா்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அனுமதியின்றி இடையூறு ஏற்படுத்தும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைத்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தா், ஆா்.சக்திவேல் அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, உடன்குடி நகா் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் ஞாயிற்றுக்கிழமை அன்றே அகற்றப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி, மீண்டும் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டால் மனுதாரா் நீதிமன்றத்தை நாடலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.