இதனையடுத்து, மின் மாற்றிக்குச் செல்லும் உயரழுத்த மின் கம்பங்கள் அமைக்கும் பணிகளை மின் வாரிய பணியாளா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, மேற்கண்ட பணியினை விரைந்து தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வை பொறியாளா் உள்ளிட்ட அலுவலா்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா். மேலும், மின் சாதன தளவாடப் பொருள்களை விரைந்து வழங்கி எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.