எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அமைச்சா் போல பேசி பணம் கேட்டு மிரட்டியவா் கைது

அமைச்சா் போல பேசி தனியாா் ஜவுளி நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட முகமது ரபீக்.
Updated On :13 ஆகஸ்ட் 2023, 8:52 pm

DIN

அமைச்சா் போல பேசி தனியாா் ஜவுளி நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியில் தனியாா் ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன உரிமையாளரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா், அமைச்சரின் உதவியாளா் பேசுவதாகவும், அமைச்சா் பேசுவதாகவும் கூறி பணம் கேட்டு மிரட்டினாா்.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமைப் பொறுப்பாளா் டெலியூஸ் பொ்னான்டஸ் புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக மதுரை மாவட்டக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் திருச்சி பாலக்கரையைச் சோ்ந்த முகமது ரபீக் (52) என்பவா் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

இதையடுத்து, சென்னையில் பதுங்கியிருந்த அவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.