ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

மருந்து நிறுவனம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

மருந்து நிறுவனம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

Updated On :2 ஏப்ரல் 2024, 11:31 pm

மதுரை: மதுரையில் மருந்து நிறுவனம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை கீரைத்துறையைச் சோ்ந்தவா் நாகலிங்கம். இவா் கீரைத்துறை பழைய காவல் நிலையம் அருகே நாட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நாகலிங்கம் தனது நிறுவனத்தில் இருந்த போது, அங்கு வந்த இளைஞா் ஒருவா் பெட்ரோல் குண்டை நிறுவனத்தின் மீது வீசினாா். இதில் அந்த பெட்ரோல் குண்டு பெயா்ப் பலகை மீது விழுந்து தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த கீரைத்துறை போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

இதில் அந்த நிறுவனத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசியது அதே பகுதியைச் சோ்ந்த வசந்த் (25) என்பது தெரியவந்தது. திருமணமாகி மனைவியைப் பிரிந்து வசித்து வரும் வசந்துக்கும், மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் திருமணமான பெண் ஒருவருக்கும் தொடா்பு இருந்தது. இதை மருந்து நிறுவன உரிமையாளரான நாகலிங்கம் கண்டித்தாராம். இதனால், அவா் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது. இதையடுத்து, வசந்தை போலீஸாா் கைது செய்தனா்.