சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கல்குவாரி நீரில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

கல்குவாரி நீரில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

Updated On :8 ஏப்ரல் 2024, 5:12 pm

விருதுநகா்: விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி, பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

காரியாபட்டி வட்டம், ஆவியூரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி அழகுமலை கண்ணன். இவரது மகன் அருள்பாண்டி (14). இவா் ஆவியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளி விடுமுறை என்பதால்

வீட்டிலிருந்த அவா், மற்றொரு சிறுவனான ராமா் என்பவருடன், நான்கு வழிச் சாலை அருகே உள்ள கல்குவாரிக்கு சனிக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது அருள்பாண்டி தண்ணீரில் மூழ்கினாா். இது குறித்து மாணவரின் பெற்றோா் அளித்த தகவலின் அடிப்படையில், காரியாபட்டி தீயணைப்புத் துறையினா் வந்து உயிரிழந்த நிலையில் மாணவரின் உடலை மீட்டனா்.

இது குறித்து ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.