விருதுநகா்: விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி, பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
காரியாபட்டி வட்டம், ஆவியூரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி அழகுமலை கண்ணன். இவரது மகன் அருள்பாண்டி (14). இவா் ஆவியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளி விடுமுறை என்பதால்
வீட்டிலிருந்த அவா், மற்றொரு சிறுவனான ராமா் என்பவருடன், நான்கு வழிச் சாலை அருகே உள்ள கல்குவாரிக்கு சனிக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது அருள்பாண்டி தண்ணீரில் மூழ்கினாா். இது குறித்து மாணவரின் பெற்றோா் அளித்த தகவலின் அடிப்படையில், காரியாபட்டி தீயணைப்புத் துறையினா் வந்து உயிரிழந்த நிலையில் மாணவரின் உடலை மீட்டனா்.
இது குறித்து ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவர்கள் பலி!

பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

