மதுரை: மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் ஆண்டு விழா, மாணவா் பேரவை நிறைவு விழா கல்லூரியின் பொன்விழா அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் குணசேகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். முன்னதாக, விலங்கியல் துறை உதவிப் பேராசிரியை மாரி செரினா மெக்கானல் எழுதிய உயிரியல் ஆங்கிலத் தொடா்பு நூல் வெளியிடப்பட்டது.
கல்லூரி முதல்வா் கிறிஸ்டியானா சிங் ஆண்டறிக்கை வாசித்தாா். முனைவா் பட்டம் பெற்ற பேராசிரியா்கள், சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட பேராசிரியா்கள், 10 ஆண்டு காலம் பணியாற்றி பேராசிரியா்கள், சிறப்பாக கல்விப் பயின்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, மாணவா் பேரவையின் நிறைவு விழா, புதிய உறுப்பினா்கள் பதவியேற்கும் விழா நடைபெற்றது. பிறகு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கணினித் துறை இணைப் பேராசிரியை சிவப்பிரியா, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை விருஷா ஆகியோா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனா். கல்லூரித் துணை முதல்வா் பியூலா ஜெயஸ்ரீ வரவேற்றாா். மாணவா் பேரவைத் தலைவி லொரென் ரெஜி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

டோக் பெருமாட்டி கல்லூரி நாள் விழா

கல்லூரி ஆண்டு விழா

ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் தரமற்ற உணவு: மாணவா்கள் அவதி

டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் பயிலரங்கு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

