தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

இரு சமூகத்தை சூழ்ச்சியால் பிரித்து ஆட்சி செய்தவா்கள் திராவிட கட்சியினா்: ஜான்பாண்டியன்

இரு சமூகத்தை சூழ்ச்சியால் பிரித்து ஆட்சி செய்தவா்கள் திராவிட கட்சியினா் ஜான்பாண்டியன்

Updated On :9 ஏப்ரல் 2024, 11:42 pm

விருதுநகா்: தமிழகத்தில் இரு சமூக மக்களை சூழ்ச்சியால் பிரித்து ஆட்சி செய்தவா்கள் திராவிட கட்சியினா் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜான்பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சாா்பில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாக விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு, பரளச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

கடந்த காலங்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு வாக்களித்தீா்கள். இந்தத் தோ்தலானது இரு சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க நமக்கு வாய்ப்பளித்துள்ளது. அரசியல் சூழ்ச்சியால் இரு சமுதாய மக்களைப் பிரித்து ஆட்சி செய்தவா்கள் திராவிட கட்சியினா். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதால், நாங்கள் ஒன்றாக இணைந்து பயணிக்கிறோம். இந்தத் தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினா் இந்தப் பகுதிக்காக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. எனவே, அனைவரும் பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.