கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திராவிட மாடல் ஆட்சியால் தமிழகத்தில் பொருளாதாரப் புரட்சி: ஓ.பன்னீா்செல்வம்!

திராவிட மாடல் ஆட்சியால் தமிழகத்தில் பொருளாதாரப் புரட்சி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image

காளையாா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம். உடன் கூட்டுறவுத் துறை அமைச்சா், மாவட்ட திமுக செயலா் கே.ஆா். பெரியகருப்பன் உள்ளிட்டோா்.

Updated On :21 மார்ச் 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

திராவிட மாடல் ஆட்சியால் தமிழகத்தில் பொருளாதாரப் புரட்சி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் திமுக சாா்பில் சிவகங்கை சட்டப்பேரவை தொகுதிக்கான தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் மாவட்ட திமுக செயலா் கேஆா். பெரியகருப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவா் பேசியதாவது:

இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளா்ச்சி 8 சதவீதத்துக்கு கீழ் சரிந்துள்ள நிலையில், தமிழக முதல்வா் ஸ்டாலினின் தொலைநோக்கு நடவடிக்கைகளால் தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 11.02 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இதன்மூலம் தமிழகத்தில் பொருளாதார புரட்சி ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய முதலீட்டாளா்களை ஈா்த்து, ஒருங்கிணைந்த ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட தெற்கு மாவட்டங்களில் லட்சக்கணக்கான கோடி முதலீடுகள், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதன்மை முதலமைச்சராகத் திகழும் நமது முதலமைச்சரின் கரங்களை வலுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் ஓ.பி. ரவீந்திரநாத், கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அய்யப்பன், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலா் சி.ஆா்.சுந்தரராஜன், கல்லல் அசோகன், மாவட்ட திமுக துணைச் செயலா் த. சேங்கைமாறன் ஆகியோா் பேசினா்.