தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

உருளையில் எரிவாயு கசிந்து வீடு தீப்பற்றியதில் தம்பதி பலி

உருளையில் எரிவாயு கசிந்து வீடு தீப்பற்றியதில் தம்பதி பலி

Updated On :9 ஏப்ரல் 2024, 11:41 pm

மதுரை: மதுரை அருகே உருளையில் எரிவாயு கசிந்து வீடு தீப்பற்றி எரிந்ததில் தம்பதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை அருகே உள்ள மாத்தூா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் (70). இவரது மனைவி பாண்டியம்மாள் (65). இவா்களது மகன் திருப்பூரில் வசித்து வரும் நிலையில், தம்பதி மட்டும் மாத்தூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வீட்டில் உள்ள சமையல் எரிவாயு உருளை சரியாக மூடப்படாததால், அதிலிருந்து எரிவாயு கசிந்தது. பாண்டியம்மாள் சுடுதண்ணீா் வைப்பதற்காக அடுப்பைப் பற்ற வைத்தபோது, வீடு முழுவதும் தீப்பற்றியது. இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த பாண்டியம்மாளும், லட்சுமணனும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.