மதுரை: மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் தேசிய மாணவா் அமைப்பு சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில இணைச் செயலா் விஜயராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்தத் தோ்தல் நடைபெறும் என்பதால், வாக்காளா்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையை ஆற்ற முன்வர வேண்டும்.
வலுவான அதிகாரமும், தன்னிறைவும் பெற்ற பாரதத்தை உருவாக்கக் கூடிய மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்க நாம் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும். இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகம். இளைஞா்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பதை விடுத்து, நாட்டுக்கு யாா் நல்லது செய்வா் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

தோ்தலில் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பிதழ்

அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரத்தில் நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

