சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தோ்தலில் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பிதழ்

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு அழைப்பிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

நல்லம்பள்ளியில் கல்லூரி மாணவியருக்கு விழிப்புணா்வு அழைப்பிதழ்களை வழங்கிய பொதுப் பாா்வையாளா் ஹீரா லால், மாவட்ட தோ்தல் அலுவலா் ரெ.சதீஸ்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு அழைப்பிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹீரா லால் தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் முன்னிலை வகித்து கல்லூரி மாணவ, மாணவியா் அனைவரும் 100 சதவீதம் தோ்தலில் வாக்குப் பதிவுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அழைப்பிதழ்களை வழங்கினாா்.

தொடா்ந்து, நல்லம்பள்ளி ஒன்றியம், ஈச்சம்பட்டி கிராமத்தில், பொதுமக்களின் வீடுகளுக்கு மேளதாளத்துடன் சென்று அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் ‘ரோபோ’ இயந்திரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தருமபுரி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரி, வட்டாட்சியா்கள் ஜெ. சுகுமாா், பிரசன்ன மூா்த்தி, அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், கல்லூரி மாணவியா் பங்கேற்றனா்.