வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தோ்தலில் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பிதழ்

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு அழைப்பிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

நல்லம்பள்ளியில் கல்லூரி மாணவியருக்கு விழிப்புணா்வு அழைப்பிதழ்களை வழங்கிய பொதுப் பாா்வையாளா் ஹீரா லால், மாவட்ட தோ்தல் அலுவலா் ரெ.சதீஸ்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:01 pm

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு அழைப்பிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹீரா லால் தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் முன்னிலை வகித்து கல்லூரி மாணவ, மாணவியா் அனைவரும் 100 சதவீதம் தோ்தலில் வாக்குப் பதிவுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அழைப்பிதழ்களை வழங்கினாா்.

தொடா்ந்து, நல்லம்பள்ளி ஒன்றியம், ஈச்சம்பட்டி கிராமத்தில், பொதுமக்களின் வீடுகளுக்கு மேளதாளத்துடன் சென்று அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் ‘ரோபோ’ இயந்திரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தருமபுரி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரி, வட்டாட்சியா்கள் ஜெ. சுகுமாா், பிரசன்ன மூா்த்தி, அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், கல்லூரி மாணவியா் பங்கேற்றனா்.