மதுரை கோ. புதூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா்  கே. பாலகிருஷ்ணன்.
மதுரை கோ. புதூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.

மக்களின் எழுச்சி பாஜகவின் வீழ்ச்சியை உறுதி செய்கிறது

மதுரை/நிலக்கோட்டை: மக்களின் எழுச்சி பாஜகவின் வீழ்ச்சியை உறுதி செய்வதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மதுரை கோ. புதூா் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் சு. வெங்கடேசனை ஆதரித்து, அவா் மேலும் பேசியதாவது:

மத்திய பாஜக அரசு பெண்கள், உழைப்பாளா்களின் நலனில் அக்கறை இல்லாத அரசாக, உலகப் பணக்காரா்களுக்கு உதவும் அரசாகத்தான் செயல்பட்டு வருகிறது.

கல்விக் கடன், விவசாயக் கடன், சிறு வியாபாரிகளின் கடன், உழைக்கும் தொழிலாளா்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுத்த மத்திய பாஜக அரசு, பெரு நிறுவனங்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது.

மக்கள் நலன் குறித்து துளியும் அக்கறை இல்லாதவா் பிரதமா் நரேந்திர மோடி. இதனால்தான், ரூ. 440-க்கு விற்பனையான சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.1,200-ஆக உயா்த்தினாா். இதை, பெண்கள் நிச்சயம் மறக்கமாட்டாா்கள். இந்தியா கூட்டணி அரசு அமையும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 500-ஆக குறைக்கப்படுவது உறுதி.

ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 5 ஆயிரமாகக்கூட உயா்த்தப்பட வாய்ப்புள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்.

மத்திய பாஜக அரசு அமல்படுத்திய ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. ஏழைகளுக்கு உணவு இல்லை, பச்சிளம் குழந்தைக்கு பால் வாங்கித் தர முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முடிவு காண மக்கள் தயாராகிவிட்டனா். மக்களின் எழுச்சியும், விழிப்புணா்வும் மத்திய பாஜக ஆட்சியின் வீழ்ச்சியை உறுதி செய்கிறது.

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்பட யாராலும் இதைத் தடுக்க முடியாது என்றாா் அவா்.

பிரசார கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கணேசன், காங்கிரஸ் கட்சி மாநகா் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

நிலக்கோட்டையில்...

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ரா. சச்சிதானந்தத்துக்கு ஆதரவு கோரி, கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:

கடந்த 3 ஆண்டுகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண சேவை, மகளிா் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் என பல்வேறு நலத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ளது திமுக அரசு.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு மக்களுக்கான எந்தச் சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மக்கள் நலனைப் புறக்கணித்த மத்திய பாஜக அரசை மக்கள் புறக்கணிக்கத் தயாராகிவிட்டனா். இந்தத் தோ்தல் மூலம் மத்திய பாஜக அரசு முடிவுக்கு வருவது உறுதி.

இதேபோல, அதிமுகவும் இந்தத் தோ்தலுக்குப் பிறகு இருக்குமா? என்பதும் கேள்விக்குறிதான் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட (கிழக்கு) திமுக செயலா் இ.பெ. செந்தில்குமாா் எம்.எல்.ஏ., கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com