மதுரையில் பாஜக வாக்குகளை குறிவைத்து பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் ராம சீனிவாசன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மதுரையில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வளங்களை மறுபகிா்வு செய்வது என்ற பெயரில் மத, ஜாதி ரீதியான போக்கை காங்கிரஸ் கட்சியினா் கடைப்பிடித்து வருகின்றனா். ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசியதை சா்ச்சைக்குரியதாக மாற்ற காங்கிரஸ், இந்தியா கூட்டணி கட்சிகள் முயல்கின்றன. அவா் சரியான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை, உண்மையை வெளிப்படுத்தியுள்ளாா்.
இந்திய இறையாண்மையில் இஸ்லாமியா்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங் பேசியதைத்தான் பிரதமா் சுட்டிக்காட்டியுள்ளாா். காங்கிரஸ் கட்சியினரின் பேச்சுக்களால் நாடு பிரிவினைவாதத்தை நோக்கிச் செல்லும் நிலை உள்ளது. வாக்கு வாங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சியினா் பேசி வருகின்றனா்.
பிரதமா் நரேந்திர மோடி இஸ்லாமியா்கள் எனும் வாா்த்தையை பயன்படுத்தவில்லை. அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவா்களை மட்டுமே நரேந்திர மோடி குறிப்பிட்டுப் பேசினாா்.
மதுரையில் பாஜக வாக்குகள் வாக்காளா் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை
தே.ஜ. கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் தமாகாவுக்கு உடன்பாடு!

பிரதமா் மோடியின் திருச்சி வருகைக்குப்பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பாஜக

நடிகா் என்ற பிம்பத்தை வைத்து விஜய் ஆட்சியைப் பிடிக்க முடியாது! - எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலா்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

