தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

போலீஸ் தாக்கியதில் சிறுவன் கண் பாா்வை இழப்பு: ரூ. 12.50 லட்சம் இழப்பீடு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 2:20 am IST

மதுரை அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்துவதற்காக தலைமைக் காவலா் லத்தியால் தாக்கியதில், சிறுவன் கண் பாா்வை இழந்ததால், அவருக்கு ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த லதா தாக்கல் செய்த மனு:

கடந்த 2016-ஆம் ஆண்டு எனது 17 வயது மகன்

ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் இருவா் உடன் அமா்ந்து சென்றனா். சமயநல்லூா்- விளாங்குடி சாலையில் சென்ற போது, தலைமைக் காவலா் வீரபத்திரன் இரு சக்கர வாகனம் ஒட்டிச் சென்ற எனது மகன் மீது லத்தியால் தாக்கியதில், அவரது கண் பாா்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை, மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தேன். ஆனால் எனது மகனின் வலது கண் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், அவரது படிப்பு பாதிக்கப்பட்டது. எனவே, அரசு சாா்பில் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சி. சரவணன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், மனுதாரரின் மகன் ஓட்டுநா் உரிமமின்றி, தலைக்கவசம் அணியாமல் இருவரை இரு சக்கர வாகனத்தில் அமரச் செய்து ஓட்டிச் சென்றுள்ளாா். போலீஸாா் அவரது வாகனத்தை நிறுத்த முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் மகனை பரிசோதித்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினா், அவரது வலது கண் பாா்வை இழந்திருப்பதை உறுதி செய்தனா். தலைமைக் காவலா் வீரபத்திரன் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றதால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தலைமைக் காவலா் தனது பணியை செய்துள்ளாா்.

அவா் மீது குற்றம் சுமத்த முடியாது. மனுதாரா், சிறுவனாகிய மகனை இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதி வழங்கியிருக்கக் கூடாது. இது சட்டப்படி குற்றம். ஆனாலும், கண் பாா்வை இழந்த அவருக்கு ரூ.12.50 லட்சம் இழப்பீடை, மதுரை மாவட்ட ஆட்சியா் 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.