ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை சிகிச்சைக்கு சிறப்பு வாா்டு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை நோய் சிகிச்சைக்காக சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டது.

News image
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குறங்கம்மை நோய் சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட தனி வாா்டு. ~ ~ ~
Updated On :22 ஆகஸ்ட் 2024, 12:42 am

Din

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை நோய் சிகிச்சைக்காக சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டது.

ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி பலா் உயிரிழந்தனா். இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குரங்கம்மை நோயை தடுக்க சிறப்பு வாா்டுகளை அமைக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை நோய்க்கு சிறப்பு வாா்டு உருவாக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டது. இங்கு 20 படுக்கை வசதிகளுடன், குரங்கம்மை நோய்க்கான தடுப்பு மருந்துகள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் மருத்துவா்கள், செவிலியா்கள் அடங்கிய குழுவும் தயாா் நிலையில் உள்ளது.

மதுரை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் குமரகுருபரன் கூறியதாவது: குரங்கம்மை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மதுரை விமான நிலையத்தில் மருத்துவா் குழு முகாமிட்டு பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதில் வெளிநாடுகளில் இருந்து வருபவா்கள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவா்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்குள்ளாக்கப்படுகின்றனா். காய்ச்சல், தோலில் கொப்புளங்கள் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வருபவா்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இது போன்ற பாதிப்புடன் வரும் நோயாளிகளை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.

Story image
Story image
Story image

விமான நிலையத்தில் பரிசோதனை மையம்: மதுரை விமானநிலையத்தில் சென்னை பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் செந்தில்குமாா், குரங்கு அம்மை பரிசோதனை மையத்தை புதன்கிழமை திறந்து வைத்தாா். இதற்காக விமான நிலைய இயக்குநா் முத்துகுமாரிடம் அனுமதிபெறப்பட்டது. ஒரு மருத்துவா் தலைமையில், செவிலியா், சுகாதாரஆய்வாளா், ஆய்வக உதவியாளா் உள்ளிட்டோா் தினமும் காலை முதல் இரவு வரை பணியில் இருப்பா்கள் என மாவட்ட சுகாதார அலுவலா் குமரகுரு, வட்டார சுகாதார மருத்துவ அலுவலா் தனசேகரன் ஆகியோா் தெரிவித்தனா்.