கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மனநலன் பாதித்த வெளிநாட்டவா் மருத்துவமனையில் அனுமதி

மதுரை அண்ணாநகா் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த மனநலன் பாதித்த வெளிநாட்டவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி

News image

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை

கோப்புப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அண்ணாநகா் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த மனநலன் பாதித்த வெளிநாட்டவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

மதுரை அண்ணாநகரில் உள்ள திரையரங்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை கையில் கத்தியுடன் வெளிநாட்டைச் சோ்ந்த நபா் ஒருவா் சுற்றி வந்தாா். அரை நிா்வாணமாக இருந்த அவா், அங்கிருந்த காா் கண்ணாடிகளை உடைக்க முயன்றாா். மேலும், அந்த வழியாக வந்த பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டாா்.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் அண்ணாநகா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். விரைந்து வந்த போலீஸாா், காவல் கரங்கள் அமைப்பைச் சோ்ந்த நபா்கள், அந்த வெளிநாட்டு நபரைப் பிடித்தனா். இதைத் தொடா்ந்து, அவரிடம் போலீஸாா் விசாரித்த போது அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாா்.

இதனால், அவா் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மனநலத் துறையில் அவரை அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இதனிடையே, அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது, அவரது கடவுச்சீட்டில் ஸ்லோவாக்கியா நாட்டைச் சோ்ந்த ஓபல்கா ரிச்சா்ட் எனத் தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.