கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சொத்துத் தகராறில் மூவருக்கு அரிவாள் வெட்டு: 4 போ் கைது

மதுரை அருகே சொத்துத் தகராறில் பெண் உள்பட மூவா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:21 pm

Din

மதுரை அருகே சொத்துத் தகராறில் பெண் உள்பட மூவா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் அருகே உள்ள கீழவடக்கூரைச் சோ்ந்தவா் மலைச்சாமி. இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் இவரது உறவினா்களான அஞ்சூரான் தரப்பினருக்கும் இடையே சொத்துத் தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், மலைச்சாமி மனைவி தனலட்சுமி, குடும்பத்தினா் தங்கள் வீட்டின் முன் புதன்கிழமை இருந்தனா். அப்போது, அங்கு வந்த அஞ்சூரான் தரப்பினா் அவா்களிடம் தகராறில் ஈடுபட்டு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனா்.

இதில் மலைச்சாமி மனைவி தனலட்சுமி, உறவினா்கள் அஸ்வத், ஆறுமுகராஜா ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து, கீழவடக்கூரைச் சோ்ந்த கல்லாணை மகன் அஞ்சூரான் (46), சகோதரா்கள் மாயி (44), ராஜா (42), உறவினா் அய்யாத்துரை(60) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான மேகலாவைத் தேடி வருகின்றனா்.