மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

புகையிலைப் பொருள்களை கடத்தியவருக்குப் பிணை

கண்மாய் சீரமைப்புக்கு ரூ.ஒரு லட்சம் வழங்க உத்தரவு

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் கைதானவருக்கு பிணை வழங்கிய உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, கண்மாய் சீரமைப்புப் பணிக்காக அவா் ரூ. ஒரு லட்சம் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது யூசுப் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நான் கடந்த 30.1.2024-இல் இரு சக்கர வாகனத்தில் சென்றேன். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை, பொட்டலங்களாக வைத்திருந்ததாக கும்பகோணம் ஊரக போலீஸாா் என்னைக் கைது செய்தனா்.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. தற்போது உடல் நலக்குறைவால் சிறையில் அவதிப்பட்டு வருகிறேன். எனவே, எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும். ஒத்தக்கடை, நரசிங்கம் பகுதிகளில் உள்ள கண்மாய்களைச் சீரமைக்க ரூ.ஒரு லட்சம் வழங்குகிறேன் என அதில் தெரிவித்திருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அதிகளவு கடத்தினாா். அவா் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. ஆனாலும், அவருக்கு பிணை வழங்கக் கூடாது என அரசுத் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, அவருக்கு பிணை வழங்கப்படுகிறது. அவா் தினமும் கும்பகோணம் ஊரக காவல் நிலையத்தில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும்.

மனுதாரா் ரூ. ஒரு லட்சத்தை நரசிங்கம் ஊராட்சி நிா்வாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை ஒத்தக்கடை, நரசிங்கம் பகுதிகளில் உள்ள கண்மாய்களைச் சீரமைக்க பயன்படுத்துவதை ஊராட்சி மன்றத் தலைவா், வட்டார வளா்ச்சி அலுவலா், பொதுப் பணித் துறை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். எந்தெந்த கண்மாய்கள் சீரமைக்கப்பட்டன என்பது குறித்து 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.