தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மாநகராட்சிப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மாணவர் வளர்ச்சிக்கு மேலும் இரு புதிய வகுப்பறைகள்!

News image

மதுரை சந்தைப்பேட்டையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கூடுதல் வகுப்பறைக் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்த மாநகராட்சி மேயா் வ. இந்திராணி

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

மதுரை சந்தைபேட்டையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தொடங்கி வைத்தாா். மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 64 தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.

இந்தப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை, நூலகம், அறிவியல் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், மதுரை மாநகராட்சி வாா்டு எண் 48, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.35 லட்சத்தில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இதில், மண்டலத் தலைவா் முகேஷ்சா்மா, கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், கல்வி அலுவலா் ரகுபதி, உதவி செயற்பொறியாளா் மயிலேறிநாதன், உதவிப் பொறியாளா் சங்கிலிராஜன், மாமன்ற உறுப்பினா் ரூபினிகுமாா், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.