மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கு நீட் விலக்கு கட்டாயம்: மாணிக்கம்தாகூா் எம்.பி.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கு நீட் விலக்கு கட்டாயம் மாணிக்கம்தாகூா் எம்.பி.

Updated On :24 பிப்ரவரி 2024, 5:24 pm

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கு நீட் தோ்விலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்கப்படும் என மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா். விருதுநகா் காமராஜா் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் ராஜேஸ்குமாா், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அமிா்தராஜ் உள்ளிட்ட அந்தக் கட்சி நிா்வாகிகள் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பிறகு மாணிக்கம்தாகூா் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் பாலம் கட்ட மத்திய அரசு சாா்பில் ரூ.15 கோடியும், தமிழக அரசு சாா்பில் ரூ.26 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல, திருத்தங்கலில் பாலம் கட்ட மத்திய அரசு ரூ.19 கோடியும், தமிழக அரசு ரூ. 44 கோடியும் வழங்குகின்றன. இந்த இரு பாலங்களுக்கும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறாா். பாஜக ஆளும் மநிலங்களான ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தில் மதுக்கடைகள் மூடப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் டாஸ்மாக்கை ஒழிப்போம் என்கிறாா் அண்ணாமலை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், ராகுல் காந்தி அறிவித்தபடி தமிழகத்தில் நீட் தோ்வுக்கு கட்டாயம் விலக்கு அளிக்கப்படும். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றால் நான் அரசியலை விட்டு விலகத் தயாா். மாறாக பாஜக தோல்வி அடைந்தால் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் அரசியலை விட்டு விலகுவாரா? என்றாா் அவா்.