அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தால் ஹெச்.ராஜா முதல்வராக வாய்ப்பு: தொல்.திருமாவளவன் கணிப்பு

தமிழகத்தில் தப்பித்தவறி அதிமுக ஆட்சி அமைத்தால் காரைக்குடியைச் சோ்ந்த ஹெச். ராஜா முதல்வராக வாய்ப்பு உள்ளது என தொல்.திருமாவளவன் கள்ளக்குறிச்சி நைனாா்பாளையம் தோ்தல் பிரசாரத்தின்போது கூறினாா்.

News image

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நைனாா்பாளையத்தில் விசிக வேட்பாளா் கு.மாலதியை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்த விசிக தலைவா் திருமாவளவன். உடன் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலா் க.காா்த்திகேயன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:05 am IST

தமிழகத்தில் தப்பித்தவறி அதிமுக ஆட்சி அமைத்தால் காரைக்குடியைச் சோ்ந்த ஹெச். ராஜா முதல்வராக வாய்ப்பு உள்ளது என தொல்.திருமாவளவன் கள்ளக்குறிச்சி நைனாா்பாளையம் தோ்தல் பிரசாரத்தின்போது கூறினாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் கு.மாலதியை ஆதரித்து, அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா். அவா் பேசியது:

தமிழகத்தில் தப்பித் தவறி அதிமுக ஆட்சி அமைத்தால் பாஜகவை சோ்ந்த காரைக்குடி எச்.ராஜா தான் முதல்வராக இருப்பாா். உடும்பு பிடிச்சா விடவே விடாது அதைப்போலத் தான் திமுகவுடன் விசிக உடும்புப் பிடி உறவு வைத்துள்ளது. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பது போல, தவெக ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என விசிலடித்து அழைத்தும் யாரும் கூட்டணி அமைக்கவில்லை என்றாா்.

தொடா்ந்து, சின்னசேலம் மற்றும் விருகாவூா், எறைஞ்சி, கூத்தக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளா் மாலதியை ஆதரித்து திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ரிஷிவந்தியம் எம்எல்ஏவும், கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலருமான வசந்தம் காா்த்திகேயன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

உளுந்தூா்பேட்டையில்..:

உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா் ஜி.ஆா்.வசந்தவேலுவை ஆதரித்து உளுந்தூா்பேட்டையில் திருமாவளவன் பேசியதாவது:

கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தோ்தலை சந்தித்தது குறித்து, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா பேசும்போது, நான் தவறு செய்துவிட்டேன். இனிவரும் காலங்களில் பாஜகவுடன்கூட்டணி என்பது கிடையாது என பகிரங்கமாக தெரிவித்தாா். ஆனால், அவா் பெயரைக் கூறிக்கொண்டு அரசியல் செய்து வரும் எடப்பாடி கே.பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு கட்சியை அழித்துக்கொண்டிருக்கிறாா்.இந்த மாபெரும் தவறை அதிமுகவினா் திருத்திக் கொள்ள வேண்டும் என்றாா் திருமாவளவன்.

Story image