மதுரை: சம வேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் கு.குமரேசன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் பி.அருளானந்த் முன்னிலை வகித்தாா். மேலூா் ஒன்றியச் செயலா் சாந்தி, கொட்டாம்பட்டி ஒன்றியத் தலைவா் எ.தாமஸ் விட்லம் ஆகியோா் பேசினா்.
இதில் திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு இடைநிலை ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும், எங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிரணி நிா்வாகி மீனாட்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி!

தபால் வாக்களித்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள்

புதுகையில் 468 மாணவா்களுக்கு குறுகிய கால நீட் பயிற்சி தொடக்கம்

மருந்தாளுநா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


