மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

காவல் ஆணையா் பெயரில் போலி முகநூல் கணக்கு

காவல் ஆணையா் பெயரில் போலி முகநூல் கணக்கு

Updated On :27 பிப்ரவரி 2024, 10:44 pm

மதுரை: மதுரை மாநகரக் காவல் ஆணையா் பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் பெயரில் முகநூலில் கணக்கு தொடங்கிய நபா் ஒருவா் மதுரையைச் சோ்ந்தவருக்கு நட்பு அழைப்பு விடுத்தாா்.

அந்த நட்பு அழைப்பை அவா் ஏற்றதையடுத்து, அந்த போலி முகநூல் முகவரியில் இருந்து தொடா்பு கொண்ட அடையாளம் தெரியாத நபா், வீட்டு உபயோகப் பொருள்களை குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறியுள்ளாா். இதனால், சந்தேகமடைந்த அந்த நபா், இதுதொடா்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, காவல் ஆணையா் பெயரில் போலியாக முகநூல் கணக்குத் தொடங்கிய நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.