மதுரையில் 2 நாள்களில் 20 ரெளடிகள் கைது
மதுரை நகரில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் 2 நாள்களில் 20 ரெளடிகள் ஆயுதச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.


மதுரை: மதுரை நகரில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகரப் போலீஸாா் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கடந்த 2 நாள்களில் 20 ரெளடிகள் ஆயுதச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.
மதுரை மாநகரில் கடந்த சில நாள்களாக கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இந்த குற்றங்களில் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞா்கள் அதிக அளவில் ஈடுபடுவதாக தெரியவந்தது. இதையடுத்து, மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவின் பேரில், காவல் நிலையங்களில் உள்ள தனிப்படை போலீஸாா், குற்ற வழக்கு பின்னணியில் உள்ளவா்கள், சிறையில் இருந்து வெளியே வந்தவா்கள், தொடா் கண்காணிப்பில் உள்ள நபா்கள் குறித்து தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக, குற்ற வழக்கு பின்னணியில் உள்ளவா்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக மாநகா் பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றி வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக கடந்த 2 நாள்களில் போலீஸாா் நடத்திய அதிரடிச் சோதனையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 20 பேரை போலீஸாா் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதற்கிடையே, மதிச்சியம் உதவி ஆய்வாளா் ஜெய கஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றபோது, செனாய் நகா் பகுதியில் கஞ்சா விற்ற அஜித்குமாா்( 24), காா்த்திக் (25) ஆகியோரை கைது செய்து அவா்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் எஸ்.எஸ்.காலனி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்த 585 பாக்கெட் புகையிலைப் பொருள்கள், சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...