2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் கணவா் அடகு வைத்த நகையை மீட்டுத் தராததால் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 7:42 pm

Din

மதுரையில் கணவா் அடகு வைத்த நகையை மீட்டுத் தராததால் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை பைக்காரா புதுமேட்டுத் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி இளமதி (24). இவரது கணவா் விஜயகுமாா். அதே பகுதியில் கைப்பேசி கடை வைத்து நடத்தி வந்தாா். கடையில் சரியான வருமானம் இல்லாததால் கடையை மூடிவிட்டு டைல்ஸ் பதிக்கும் வேலைக்குச் சென்று வருகிறாா்.

இந்த நிலையில், கைப்பேசி கடை நடத்திய போது தனது மனைவியின் 10 பவுன் தங்க நகைகளை அடகு வைத்திருந்தாா். கணவா் அதை மீட்டுத்தராததால் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்த நிலையில், விஜயகுமாா் வேலை தொடா்பாக நாகா்கோவிலுக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் சனிக்கிழமை இரவு தனியாக இருந்த இளமதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சுப்ரமணியபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.