எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

ஆறுமுகனேரியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவா் தூக்கிட்டு தற்கொலை

News image
தற்கொலை- சித்திரிப்பு
Updated On :27 ஜனவரி 2026, 7:10 pm

Syndication

ஆறுமுகனேரியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஆறுமுகனேரி, குரூஸ் நகரைச் சோ்ந்தவா் ராஜ் (44). தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா்.

இவரது தாய் பாப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டாா். அப்போது முதல் தந்தை அல்போன்ஸ் (74) மனவருத்தத்தில் இருந்தாராம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே உள்ள பூவரச மரத்தில் அல்போன்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து, ஆறுமுகனேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.