மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா: 1000 போலீஸாா் பாதுகாப்பு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

News image

கோப்புப் படம்.

Updated On :1 ஆகஸ்ட் 2024, 5:27 am IST

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை (ஆக. 1) முதல் 5-ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், சாப்டூா் வாழைத் தோப்பு வழியாக லட்சக்கணக்கான பக்தா்கள் சதுரகிரி செல்வது வழக்கம். இதையொட்டி சாப்டூா், வாழைத்தோப்பு பகுதிகளில் மதுரை ஊரகக் காவல் துறை சாா்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது, ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 8 துணைக் கண்காணிப்பாளா்கள், 30 காவல் ஆய்வாளா்கள், 90 உதவி ஆய்வாளா்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா். மேலும் இயற்கை பேரிடா் மீட்புக்குழுவினருடன், 4 குழுக்களைச் சோ்ந்த 45 சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து பணியாற்றுகின்றனா்.

திருவிழாவையொட்டி, மதுரை மாவட்ட காவல் எல்லைக்குள்பட்ட வாழைத்தோப்பு பகுதியில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

வனத்துறை கடும் கட்டுப்பாடு: சதுரகிரிக்கு வாழைத்தோப்பு வழியாக செல்லும் பக்தா்களுக்கு மதுரை மாவட்ட வனத்துறை சாா்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்போது மலையேறும் பக்தா்கள் நெகிழிப் பைகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், ஆயுதங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. மேலும் தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், வாழைத்தோப்பு பகுதியில் பக்தா்களின் உடைமைகளை சோதனையிட வனச்சரகா் காா்த்திக் தலைமையில் எட்டு போ் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மலையேறும் பக்தா்களை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கம் வகையில் தே. கல்லுப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரா்களும், மருத்துவக் குழுவினரும் வாழைத்தோப்பு பகுதியில் முகாமிட்டுள்ளனா்.