இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மதுரை மாநகராட்சிப் பகுதியில் மூன்று நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மாநகராட்சி பகுதியில் மூன்று நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

News image
Updated On :28 ஜூன் 2024, 9:17 pm

Din

மதுரை மாநகராட்சிப் பகுதியில் ஜூலை 1, 2, 3 ஆகிய மூன்று நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

வைகை அணையில் பிக்கப் வியா் ஷட்டா் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட காப்பாணையை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

எனவே, ஜூலை 1, 2, 3 ஆகிய மூன்று நாள்கள் வைகை தென்கரை, வடகரை பகுதிகளான பழைய மாநகராட்சி 72 வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் குடிநீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அத்தியாவசியமான வாா்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.