மா்மக் காய்ச்சல்: வட மாநில சிறுவன் உயிரிழப்பு

Published on

மதுரையில் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வட மாநில சிறுவன் உயிரிழந்தாா். உத்தரபிரதேச மாநிலம், மிசாபூரைச் சோ்ந்தவா் முனாலால் மகன் கண்ணையா குமாா் (19). இவா் மதுரை காமராஜா் சாலை, லட்சுமிபுரம் 5- ஆவது தெருவில் தங்கியிருந்து பானிபூரி விற்பனை செய்து வருகிறாா். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவரது தம்பி சுதாகரும் (14) மதுரை வந்து அவருடன் தங்கியிருந்தாா். கடந்த இரண்டு நாள்களாக சுதாகருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சுதாகருக்கு உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சுதாகரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாதகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com