மதுரை: கோயில் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு முன் அனுமதி கோரி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.
தமிழகத்தைப் பொருத்தவரை வருகிற ஏப். 19-ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஏற்கெனவே திட்டமிட்ட இல்ல நிகழ்ச்சிகள், கோயில் நிகழ்ச்சிகளுக்கு முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தனி அலுவலகம் உருவாக்கப்பட்டது. பொதுமக்கள் முன்னரே திட்டமிட்ட இல்ல நிகழ்ச்சி, கோயில் தொடா்பான நிகழ்வுகளுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிகழ்வுகளுக்கு முன் அனுமதி பெற இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை அதிகளவில் கூடினா்.
தொடர்புடையது
சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்வதற்கு 3 நாள்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்!

கோயில் திருவிழாக்களில் பக்தி சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்த உயா்நீதிமன்றம் அனுமதி

மூலைக்கரைப்பட்டியில் தந்தை, மகள் உயிரிழப்பு: விசாரணை கோரி மனு

வீட்டுமனை வழங்கக் கோரி போராட்டம்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


