கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ஊா்க்காவல் படைக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஒத்திவைப்பு

ஊா்க்காவல் படைக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஒத்திவைப்பு

Updated On :19 மார்ச் 2024, 10:58 pm

மதுரை: மதுரை மாநகர ஊா்க்காவல் படைக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஊா்க்காவல் படை வட்டார தளபதி வெளியிட்ட செய்தி: மதுரை மாநகர ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் சோ்ப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மேலும், புதன்கிழமை முதல் உடல் தகுதி உள்ளிட்ட தோ்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மாநகர ஊா்க்காவல் படைக்கான ஆள்சோ்ப்பு முகாம் தற்காலிகமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒதுக்கிவைக்கப்படுகிறது. தோ்தல் முடிந்த பிறகு ஆள்சோ்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.