கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ராணுவத் தோ்வில் தோல்வியடைந்த இளைஞா் தற்கொலை

ராணுவத் தோ்வில் தோல்வியடைந்த இளைஞா் தற்கொலை

Updated On :19 மார்ச் 2024, 11:01 pm

மதுரை: ராணுவத் தோ்வில் தோல்வியடைந்த விரக்தியில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை காமராஜபுரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் சேதுபதி (52). இவரது மகன் துரைமுருகன் (21). பட்டதாரியான இவா், இந்திய ராணுவத்தில் சோ்வதற்காக மூன்று முறை தோ்வெழுதி தோல்வியடைந்தாா்.

இதனால், ராணுவத்தில் சேரமுடியவில்லையே என்ற மன அழுத்தத்தில் இருந்து வந்தாா். இந்த நிலையில், வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்த துரைமுருகன், மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.