இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம்

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம்

Updated On :22 மார்ச் 2024, 5:53 pm

உலகத் தமிழ்ச் சங்கம், சி.எஸ்.ஐ. மகளிா் கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் மதுரையில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம், நூல்கள் அரங்கேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு அதன் இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந.அருள் தலைமை வகித்தாா். செம்மலா் இலக்கிய இதழ் ஆசிரியா் ச.தமிழ்ச் செல்வன் ‘தமிழ்ச் சிறுகதைகளின் வளமும், வனப்பும்’ என்ற தலைப்பில் பேசினாா். இதையடுத்து, தண்டமிழ்க் கோவை- செய்யுள் நூல், கவிஞா் வைகைச் செல்வியின் வாழ்வும், இலக்கியப் பயணமும் ஆய்வு நூல், முத்தத்தின் பிரம்படி- கவிதை நூல், நெருப்புச் சொற்கள் கவிதை நூல், பாசப் பறவைகள் சிறுகதை நூல் ஆகியன அரங்கேற்றம் செய்யப்பட்டன. தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், சி.எஸ்.ஐ. மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். முன்னதாக, உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞா் சு.சோமசுந்தரி வரவேற்றாா். ஆய்வு வளமையா் ஜ.ஜான்சிராணி நன்றி கூறினாா்.