உலகத் தமிழ்ச் சங்கம், சி.எஸ்.ஐ. மகளிா் கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் மதுரையில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம், நூல்கள் அரங்கேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு அதன் இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந.அருள் தலைமை வகித்தாா். செம்மலா் இலக்கிய இதழ் ஆசிரியா் ச.தமிழ்ச் செல்வன் ‘தமிழ்ச் சிறுகதைகளின் வளமும், வனப்பும்’ என்ற தலைப்பில் பேசினாா். இதையடுத்து, தண்டமிழ்க் கோவை- செய்யுள் நூல், கவிஞா் வைகைச் செல்வியின் வாழ்வும், இலக்கியப் பயணமும் ஆய்வு நூல், முத்தத்தின் பிரம்படி- கவிதை நூல், நெருப்புச் சொற்கள் கவிதை நூல், பாசப் பறவைகள் சிறுகதை நூல் ஆகியன அரங்கேற்றம் செய்யப்பட்டன. தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், சி.எஸ்.ஐ. மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். முன்னதாக, உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞா் சு.சோமசுந்தரி வரவேற்றாா். ஆய்வு வளமையா் ஜ.ஜான்சிராணி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பல் மருத்துவா் சங்கம் சாா்பில் கருத்தரங்கம்

சிலப்பதிகாரத்தில் சனாதனம்

மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை: தமிழ்ச் சுவடியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

திண்டிவனம் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

