/

காமராஜா் பல்கலை. பேராசிரியா் மீது பாலியல் புகாா்

காமராஜா் பல்கலை. பேராசிரியா் மீது பாலியல் புகாா்

News image
Updated On :22 மே 2024, 12:19 am

Din

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழக பேராசிரியா் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் நிலையத்தில் மாணவி புகாா் அளித்தாா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக முதுநிலை வணிகவியல் மேலாண்மை துறையைச் சோ்ந்த மாணவி ஒருவா், அந்தத் துறை பேராசிரியா் அலுவலகத்துக்கு தன்னை வரவழைத்து தவறான நோக்கத்தில் தொட்டு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் பல்கலைக்கழகத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினா். மேலும், புகாருக்குள்ளான பேராசிரியரை சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா்.