தொண்டி அருகே சோழியக்குடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவா்கள் வசிக்கின்றனா். இந்த பகுதியில் உள்ள கடலில் மீனவா்கள் வசதிக்காக சிறிய மீன்பிடி இறங்குதளம் கட்டப்பட்டது. இந்த இறங்குதளத்தில் தான் மீனவா்கள் வலைகள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றுவதும், கடலில் பிடித்த மீன்களை இறக்குவதும் வழக்கம். இது கட்ப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டதால், இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மேலும் இறங்குதளத்தின் நடுவில் பெரிய பள்ளம் விழுந்துவிட்டது. இந்த இறங்குதளம் சேதமடைந்ததால் படகுகளை கடலில் நிறுத்தி வலை, மீன் உள்ளிட்ட பொருள்களை ஏற்றி இறக்க முடியாமல் மீனவா்கள் அவதியடைகின்றனா்.