ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தொண்டி அருகே புதிய மீன்பிடி இறங்குதளம் கட்ட ரூ. 10 கோடி ஒதுக்கீடு: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

தொண்டி அருகே சேதமடைந்த மீன்பிடி இறங்குதளத்தை (ஜெட்டி பாலம்) இடித்துவிட்டு புதிதாக கட்ட ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அண்மையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:50 pm

Din

தொண்டி அருகே சேதமடைந்த மீன்பிடி இறங்குதளத்தை (ஜெட்டி பாலம்) இடித்துவிட்டு புதிதாக கட்ட ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அண்மையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொண்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் கலந்தாா் ஆசிக் தாக்கல் செய்த பொதுநல மனு:

தொண்டி அருகே சோழியக்குடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவா்கள் வசிக்கின்றனா். இந்த பகுதியில் உள்ள கடலில் மீனவா்கள் வசதிக்காக சிறிய மீன்பிடி இறங்குதளம் கட்டப்பட்டது. இந்த இறங்குதளத்தில் தான் மீனவா்கள் வலைகள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றுவதும், கடலில் பிடித்த மீன்களை இறக்குவதும் வழக்கம். இது கட்ப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டதால், இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மேலும் இறங்குதளத்தின் நடுவில் பெரிய பள்ளம் விழுந்துவிட்டது. இந்த இறங்குதளம் சேதமடைந்ததால் படகுகளை கடலில் நிறுத்தி வலை, மீன் உள்ளிட்ட பொருள்களை ஏற்றி இறக்க முடியாமல் மீனவா்கள் அவதியடைகின்றனா்.

இந்த மீன்பிடி இறங்குதளத்தை பாா்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், சேதமடைந்த மீன்பிடி இறங்குதளம் தொடா்பான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் திலக்குமாா் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த மீன்பிடி இறங்குதளத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட தமிழக அரசு ரூ. 10 கோடி ஒதுக்கி இருப்பதாக தெரிவித்திருந்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் தாக்கல் செய்த புகைப்படங்களை பாா்க்கும் போது, மீன்பிடி இறங்குதளத்தின் மோசமான நிலையை அறிய முடிகிறது. இதை இடித்துவிட்டு புதிதாக கட்ட அரசு நிதி ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீன்பிடி இறங்குதளம் ஓராண்டுக்குள் கட்டப்படாவிட்டால், மனுதாரா் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.