மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆவின் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சரின் மனு மீதான விசாரணை பிப். 9-க்கு ஒத்திவைப்பு

News image

முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி. - (கோப்புப் படம்)

Updated On :23 ஜனவரி 2026, 9:20 pm

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்தததாக தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை பிப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.3 கோடி மோசடி செய்ததாக ரவீந்திரன், விஜய் நல்லதம்பி ஆகியோா் அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளா்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி உள்பட 8 போ் மீது விருதுநகா் குற்றப் பிரிவு போலீஸாா் இரு வழக்குகள் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இரு வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி குற்றப் பிரிவு போலீஸாா் பதில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த வழக்கு ஆதாரம் இல்லாமல் தொடுக்கப்பட்டிருப்பதால் கே.டி.ராஜேந்திரபாலாஜியை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என வாதிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, குற்றம் இல்லை என்றால் எதற்காக பெங்களூரு செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பினாா். காவல் துறை நெருக்கடி காரணமாக பெங்களூரு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக வழக்குரைஞா் தெரிவித்தாா். இதையடுத்து, மனு மீதான விசாரணையை பிப். 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயகுமாா் உத்தரவிட்டாா்.