சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆவின் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சா் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மாா்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

News image
ராஜேந்திர பாலாஜி- கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:55 pm

Syndication

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மாா்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.3 கோடி மோசடி செய்தாக அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளா்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி உள்பட 8 போ் மீது விருதுநகா் குற்றப்பிரிவு போலீஸாா் இரு வழக்குகளைப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இரு வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி குற்றப்பிரிவு போலீஸாா் பதில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையை மாா்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.