ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 2 பள்ளிகளில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

News image
மதுரை கரும்பாலை பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய மேயா் வ. இந்திராணி. உடன், ஆசிரியா்கள், மாமன்ற உறுப்பினா்கள்.
Updated On :6 நவம்பர் 2024, 10:02 pm

Din

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 2 பள்ளிகளில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட கரும்பாலை பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, மானகிரி மாநகராட்சி ஆரம்பப் பள்ளிஆகியவற்றில் தலா ரூ. 35 லட்சத்தில் தலா 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்றது.

இந்தப் பணிகள் அண்மையில் நிறைவடைந்ததையடுத்து, புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாநகர மேயா் வ. இந்திராணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைத்தாா்.

துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா் சரவணபுவனேஸ்வரி, கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், உதவி ஆணையா் கோபு, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன், பள்ளித் தலைமை ஆசிரியா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.