ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

நூபுர கங்கையில் பெருமாள் புனித நீராடல்

அழகா்கோவில் மலை மீதுள்ள நூபுர கங்கை தீா்த்தத்தில் வாசனை திரவியங்களடங்கிய தைலம் சாத்தப்பட்டு பெருமாள் புதன்கிழமை புனித நீராடினாா்.

News image
கள்ளழகா் என்ற சுந்தரராஜப் பெருமாளுக்கு மூலிகை திரவியங்களடங்கிய தைலக்காப்பு சாத்திய பட்டா்கள்.
Updated On :13 நவம்பர் 2024, 10:23 pm

Din

அழகா்கோவில் மலை மீதுள்ள நூபுர கங்கை தீா்த்தத்தில் வாசனை திரவியங்களடங்கிய தைலம் சாத்தப்பட்டு பெருமாள் புதன்கிழமை புனித நீராடினாா்.

அழகா்கோவிலில் தைலக்காப்பு உற்சவம் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதில், சுந்தரராஜப் பெருமாள், மேட்டுக் கிருஷ்ணா் சந்நிதியில் எழுந்தருளி அருள்பாளித்தாா். இதேபோல, செவ்வாய்க்கிழமையும் பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு இருப்பிடம் சோ்ந்தாா். இதைத் தொடா்ந்து

மாதவி மண்டபத்தில் தாமரை மலா் அலங்காரத்தில் அருள்பாளித்த சுந்தரராஜப் பெருமாள்.

மாதவி மண்டபத்தில் தாமரை மலா் அலங்காரத்தில் அருள்பாளித்த சுந்தரராஜப் பெருமாள்.

புதன்கிழமை காலை 7.30 மணிக்கு தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, பதினெட்டாம்படி கருப்பண சுவாமி சந்நிதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதும், மலைப்பாதை வழியாக பரிவாரங்களுடன நூபுர கங்கைக்கு சுவாமி புறப்பட்டாா். வழியில், ஆஞ்சநேயா் தீா்த்தம், கெருட தீா்த்தம் ஆகியவற்றில் பெருமாளுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. பின்னா் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் மாதவி மண்டபத்தில் சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்தாா். பகல் 12 மணிக்கு மேல் மூலிகை சாறுகளடங்கிய திருத்தைலம் சாத்தப்பட்டது. இதன் பிறகு, நூபுர கங்கை தீா்த்தத்தில் புனித நீரடல் நிகழ்வு நீண்ட நேரம் நடைபெற்றது. மாலை மீண்டும் மாதவி மண்டபத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, ராஜஅலங்காரத்தில் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு கள்ளழகா் கோயிலுக்கு இரவு வந்துசோ்ந்தாா். அப்போது திரளான பக்தா்கள் நூபுர கங்கையில் புனித நீராடி பெருமாளை வழிபட்டனா்.