அரசு ராஜாஜி மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்ட இயக்குநா் ஆய்வு
மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநருமான அருண் தம்புராஜ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநருமான அருண் தம்புராஜ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, ஜப்பான் நிதியுதவியுடன் புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த அறுவைச்சிகிச்சை வளாகத்தைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்தக் கட்டடத்தின் ஆறாவது தளத்தில் உள்ள அறுவைச் சிகிச்சை அரங்குகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என்பதையறிந்த அவா், அதற்கான காரணத்தைக் கேட்டறிந்து, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதேபோல, மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் மருத்துவமனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
ஆய்வின்போது அரசு மருத்துவமனை முதன்மையா் இல.அருள் சுந்தரேஷ்குமாா், கண்காணிப்பாளா் குமரவேல், இருப்பிட மருத்துவ அதிகாரிகள் சரவணன், முரளிதரன், துறைத் தலைவா்கள் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...