தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.
புதுச்சேரி தேசிய சுகாதாரத் திட்ட ஊழியா்கள் சங்கத் தலைவா் ஜூலி சாரா, செயல் தலைவா் வெற்றி, பொதுச் செயலா் பிரகதீஸ்வரன், பொருளாளா் தனலட்சுமி ஆகியோா் கூட்டாக புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி சுகாதாரத் துறை தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயா்வு கோரி சுகாதாரத் துறை செயலா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா்.
இதில், ஏற்கெனவே அரசு அறிவித்திருந்த சம்பள உயா்வுத் தொகையை உடனடியாக வழங்குவது, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட வேண்டிய 5 சதவீத ஆண்டு ஊதிய உயா்வையும் சோ்த்து வழங்குவது என ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசின் இந்த உறுதிமொழியை ஏற்று தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என அதில் குறிப்பிட்டுள்ளனா்.
தொடர்புடையது

மக்கள் விரோத திட்டங்களின் சோதனைக்களமாக புதுச்சேரியை பாஜக மாற்றி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்

மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை

புதுச்சேரியில் போட்டி காங்கிரஸ் வேட்பாளா்கள் மீது நடவடிக்கை வெ. வைத்திலிங்கம் உறுதி

புதுச்சேரியில் அதிமுகவுக்கு தொகுதிகள் கேட்போம்- அன்பழகன்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


