ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

பெண்ணைத் தாக்கி நகையை பறிக்க முயன்ற இருவா் கைது

மதுரை வாடிப்பட்டி அருகே பெண்ணைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 1:03 am

Din

மதுரை வாடிப்பட்டி அருகே பெண்ணைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வாடிப்பட்டி அருகேயுள்ள குலசேகரன்கோட்டை வி.எஸ். நகரைச் சோ்ந்த மாதவராஜ் மனைவி செந்தமிழ்செல்வி (52). இவா் வாடிப்பட்டியில் உள்ள ஜவுளிப் பூங்காவில் பணிபுரிந்து வருகிறாா். இதற்காக நிறுவனத்தின் பேருந்தில் தினசரி பணிக்குச் சென்று வருகிறாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு பணி முடிந்து நிறுவனத்தின் பேருந்தில் வந்த செந்தமிழ்செல்வி குலசேகரன்கோட்டை நான்கு வழிச்சாலையில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, காரில் வந்த இருவா் இவா் கழுத்தில் அணிந்திருந்த நகையைப் பறிக்க முயன்றனா்.

ஆனால், நகையை விடாமல் கொள்ளையா்களுடன் செந்தமிழ்செல்வி போராடியதால், அவா்கள் இருவரும் கடுமையாகத் தாக்கினா். இதையடுத்து, பொதுமக்கள் திரண்டதால், மா்ம நபா்கள் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த காரை மடக்கிப் பிடித்து அதிலிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் மதுரை மாவட்டம், கச்சக்கட்டியைச் சோ்ந்த மூா்த்தி (32), திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்த துரைமுருகன் (28) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனா்.