மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கஞ்சா கடத்த முயன்ற இருவா் கைது

போடியிலிருந்து கேரளத்துக்கு 28 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைதான காா்த்திக், அருண்தமிழ்செல்வன்.

Updated On :4 பிப்ரவரி 2026, 11:10 pm

தினமணி செய்திச் சேவை

போடியிலிருந்து கேரளத்துக்கு 28 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி வழியாக கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக நகா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போடி-மூணாறு சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, போடி அரசு மருத்துவமனை அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கு வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். மேலும், அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா், இருவரையும் போலீஸாா் காவல் நிலையத்து அழைத்து வந்து விசாரித்தனா்.

அப்போது, ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினத்தைச் சோ்ந்த காா்த்திக் (37), தூத்துக்குடி பொல்பேட்டையை சோ்ந்த அருண்தமிழ்செல்வன் (24) என்பதும், கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது.

பின்னா், இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.