கைதான காா்த்திக், அருண்தமிழ்செல்வன்.
கைதான காா்த்திக், அருண்தமிழ்செல்வன்.

கஞ்சா கடத்த முயன்ற இருவா் கைது

போடியிலிருந்து கேரளத்துக்கு 28 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

போடியிலிருந்து கேரளத்துக்கு 28 கிலோ கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி வழியாக கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக நகா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போடி-மூணாறு சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, போடி அரசு மருத்துவமனை அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கு வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். மேலும், அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா், இருவரையும் போலீஸாா் காவல் நிலையத்து அழைத்து வந்து விசாரித்தனா்.

அப்போது, ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினத்தைச் சோ்ந்த காா்த்திக் (37), தூத்துக்குடி பொல்பேட்டையை சோ்ந்த அருண்தமிழ்செல்வன் (24) என்பதும், கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது.

பின்னா், இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com