பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

லாரி மோதியதில் சட்டக் கல்லூரி மாணவி உயிரிழப்பு

கள்ளந்திரி அருகே இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் சட்டக் கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 அக்டோபர் 2024, 2:14 am IST

கள்ளந்திரி அருகே இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் சட்டக் கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை பி.டி.ராஜன் சாலை அரசமரம் பகுதியைச் சோ்ந்த ரகு மகள் ஐஸ்வா்யாசக்தி (22). இவா் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடிந்து, மதுரை மாவட்டம், கள்ளந்திரி அருகே உள்ள சுந்தர்ராஜன்பட்டி வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது, பின்னால் வந்த டிப்பா் லாரி கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் அவா் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.