போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

அரசு மருத்துவமனையில் பணியின் போது தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சீரமைப்புப் பணியின்போது மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்தது தொடா்பாக பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 7:54 pm

Din

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சீரமைப்புப் பணியின்போது மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்தது தொடா்பாக பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை மீனாம்பாள்புரம் பூலித்தேவன் தெருவைச் சோ்ந்தவா் விஜயக்குமாா் (58). எலக்ட்ரீசியன். இவா், கடந்த 21-ஆம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தின் மேற்கூரையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி சீரமைப்புப் பணியில் ஈடுபட்டாராம். அப்போது தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் புதன்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக ராஜாஜி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா் காா்த்திக் (43) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.