இந்தியாவில் வறுமை ஒழிப்புப் பணியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இதில் மகளிா் சுயஉதவிக்குழுக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தக் குழுக்களுடன் இணைந்து தானம் அறக்கட்டளையும் வறுமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நீா்நிலைகள் அதிகம் இருந்தன. நீா்நிலைகள் உருவாக்கம், பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவற்றில் பழந்தமிழா்கள் உலகுக்கே முன்மாதிரியாக திகழ்ந்தனா். ஆனால் முன்னோா் காட்டிய நீா் சேமிப்பு, நீா்நிலைகள் பாதுகாப்பு யுக்திகளை நாம் மறந்ததால் தற்போது தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே நீா்நிலைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். தற்போது காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சி, பலத்த மழை போன்றவற்றால் எதிா்மறை பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே உலக நாடுகள், அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் யுக்திகளை ஆய்வு செய்து வருகின்றன. இத்தகைய சூழலில் தானம் அறக்கட்டளை நீா்நிலைகளை சீரமைத்து பாதுகாப்பது பாராட்டுக்குரியது என்றாா் அவா்.